உடல் கருகி மூதாட்டி பலி

கோவை, ஆக.9: கோவை தெலுங்குபாளையம் ராஜூவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (75). இவர், கடந்த 5-ம் தேதி சரஸ்வதி வீட்டில் பூஜை செய்துள்ளார். அப்போது, விளக்கேற்றும் போது தீ அவர் அணிந்திருந்த புடவையில் பிடித்தது. தீயை அணைக்க போராடியுள்ளார். ஆனால், மளமளவென தீ பிடித்தது.

இதனால், சத்தம் போட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து இவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சரஸ்வதியின் உடல் முழுவதும் கருகிய நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: