கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்றி 75வது சுதந்திரதின பெருவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 75வது சுதந்திரதின பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி(ஹர் கர் ஜந்தா) என்ற திட்டத்தினை வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து பஞ்சாயத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.