திருப்பூர், ஜூன் 25: நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திருப்பூர் காங்கயம் ரோடு பொதுமக்கள் நேற்று அப்பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட வண்ணாந்துறைப்புதூர் கிராமம் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீரும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களோடு திருப்பூர்-காங்கயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.