பந்தலூர்,ஜூன்25: நெல்லியாளம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி தேவாலாவில் நடைபெற்றது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தேவாலாவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நெல்லியாளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலகுமார் வரவேற்றார். நகராட்சி தலைவர் சிவகாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் சிவகுமார்,கவுன்சிலர் ஆலன் ஆகியோர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது.வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.