வேலாயுதம்பாளையம், மே 20: கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரி சாமி வேல் எடுத்து காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு புனித நீராடினர். பின்னர் சாமி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாமி வேலுடன் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளையம்மாள், பொம்மி, மதுரைவீரன் சாமிக்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.