கோவை, மே 20: கோவை மதுக்கரை பகுதியில் தார் டிரம் திருடப்படுவதாக புகார் வந்தது. போலீசார் சீரபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த குடோனில் 775 கிலோ எடையிலான தார் டிரம் திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஞானப்பிரகாசம் (48) என்பவர் சாலையில் நிறுத்தி இருந்த லாரியில் இருந்து தாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாசை கைது செய்தனர். மேலும் இவர் திருடி வைத்திருந்த 775 கிலோ தார் மற்றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் .