பேன்ஸி ஸ்டோரில் தீ விபத்து

மதுக்கரை.மே19: கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்(34). இவர் மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள நீதிமன்றம் அருகே பேன்ஸி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். கடையில் கவரிங் நகைகள் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணிக்கு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு பத்தரை மணியளவில் அந்த கடைக்குள் இருந்து கரும் புகை வெளியே வந்தது. அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தினேசுக்கு தகவல் கொடுத்தனர் அவர் வருவதற்குள் கடை தீ பிடித்து எரிய துவங்கியது.தீ பிடித்த தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது என்று கூறப்படுகிறது.

Related Stories: