ஈரோடு,மே13: ஈரோடு சூரம்பட்டி, 1வது மாரப்ப வீதியில் சுமார் 40 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் சாலையோரம் இருந்தது. இந்த மரம் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென்று சாய்ந்து சாலையில் விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது. மேலும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததால் இன்டர்நெட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.