தர்மபுரி, பிப்.15: தர்மபுரி நகராட்சி 30வது வார்டில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயலட்சுமி போட்டியிடுகிறார். இவருக்கான தேர்தல் அலுவலகம் நேற்று அம்பேத்கர் காலனியில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், விஜயலட்சுமிக்கு ஒதுக்கப்பட்ட தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில், அம்பேத்கர் காலனி, அமுதம் காலனி, அந்தோணி காலனி, இபி காலனி, பிஎஸ்என்எல் ஊழியர் குவாட்டர்ஸ் உள்ளிட்ட இடங்களில் தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.