தீர்த்தமலையில் திருப்படி திருவிழா

அரூர்,பிப்.9: அரூர் அடுத்த தீர்த்தமலையில் திருப்படி திருவிழா நடைபெற்றது. அரூர் கோட்ட கவிப்பேரரசு கம்பன் கழக தலைவர் செவ்வேள் முருகன் விழா ஏற்பாடுகளை செய்தார். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அசோக் விழாவை துவக்கி வைத்தார். இதில் சமரச சன்மார்க்க சங்க பொருளாளர் செம்முனி, உழவர் கவிஞர் பொன்னுரங்கன், கவிஞர் கீரை பிரபாகரன், ஸ்தபதி பரசுராமன், சிக்களூர் கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: