தர்மபுரி, ஜன.29: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 2வது மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம், மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில், தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன், முறையாக ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.