திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பெரியாயிபாளையம் ரோட்டில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும், திருமுருகன்பூண்டி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த ராஜாமாணிக்கம் (30) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.