கோவையில் 3653 பேருக்கு கொரோனா தொற்று

கோவை, ஜன. 22: கோவை மாவட்டத்தில் நேற்று 3 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம், தொற்றினால் பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 1383 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, 18 ஆயிரத்து 236 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: