கரூர், ஜன. 19: கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட இனாம்கரூர், குளத்துப்பாளையம் மற்றும் பெரியகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் நகரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதிகளுக்கு எளிதில் செல்லும் வகையில் ஈரோடு ரயில் தண்டவாளப் பாதையின் கீழ் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.