கரூர் ,ஜன.9:கரூர் மாநகராட்சி பகுதியில் ரூ. 38.24கோடி மதிப்பிலான சாலை வடிகால் வசதி மற்றும் சிறு பாலம் கட்ட திட்ட பணிகளுக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்திற்கு ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்ட திட்ட பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு முக்கிய தேவையாக நகர இணைப்புச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்துறை ,மற்றும் கிராம இணைப்புச் சாலைகள்அமைக்க ரூபாய் கரூர் மாநகராட்சி உட்பட்ட கே வி பி நகர் , வேலுச்சாமி புரம் ,செங்குந்தபுரம், வையாபுரி நகர் ,மகாத்மா காந்தி சாலை, காமராஜர்புரம், விவேகானந்தர் நகர் , கேவிபி நகர் ,குளத்துப்பாளையம், வெங்கமேடு ,நேதாஜி நகர், சின்ன ஆண்டான் கோவில் ரோடு, தீரன் சின்ன மலை நகர் ,பெரியார் சாலை, அனுமந்தராயன் கோவில் தெரு, சர்ச் கார்னர் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் ரூ.22 கோடி மதிப்பில் புதிய தார் சாலை திட்டத்திற்கு பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் குளித்தலை மாணிக்கம் , அரவக்குறிச்சி இளங்கோ கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.