தர்மபுரி, டிச.23: பாலக்கோடு அருகே, திப்பம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கவிதா (23). இவர், நேற்று முன்தினம், டூவீலரில் பாலக்கோடு-காரிமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ராஜாதோப்பு முனியப்பன் கோயில் அருகே வந்த போது, தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கவிதா சம்பவயிடத்திலேயே பலியானார். இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.