தோகைமலை அருகே துணிகரம் பட்டப்பகலில் வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

தோகைமலை, டிச. 22: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரி ஊராட்சி சீத்தப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(37). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா புழுதேரி அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 14ம் தேதி அன்று சரவணன் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

அன்று மதியம் ராதிகா வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா பீரோவை பார்த்தபோது தங்க செயின், தங்க மோதிரம், தங்க தோடு, தங்க காசு உள்ளிட்ட சுமார் 8 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் ராதிகாவின் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: