பிடிஓ அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

காரிமங்கலம், டிச.9: காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 30 பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படும் ஒன்றிய, மாநில அரசு திட்டப்பணிகள் குறித்து, திட்ட இயக்குனர் கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் மேற்கொண்டார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள், ஜல் ஜீவன் திட்டம் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பிடிஓக்கள் கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: