பொள்ளாச்சி, டிச. 8: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, ஆக்கிரமிப்பு அகற்றம், பாட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதியில் பெரும்பாலும் துப்புரவு பணியாளர்களே வசிக்கின்றனர். கடந்த 10 அண்டுகளாக ஆங்காங்கே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது.