கோவை, டிச.8: கோவை ஆர்.எஸ் புரம் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (18). கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர் ஒருவருடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஏ.கே. எஸ் நகர் அருகே சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான குகனேஸ்வரன் (21) என்பவர் நின்று கொண்டிருந்தார். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. தினேஷ்குமார், குகனேஸ்வரனிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் பணமில்லை, மதுவாங்கி தர முடியாது எனக்கூறியுள்ளார். இதை நம்பாத தினேஷ்குமார், அவரது பாக்கெட்டில் கை விட்டு பணம் இருக்கிறதா? என பார்க்க முயன்றார்.