கோவை, டிச. 7: கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வினியோகிக்கப்பட்ட அரிசி தரமில்லாத இருப்பதால், அதை அப்பகுதி மக்கள் வாங்காமல் திரும்பி செல்கின்றனர்.தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள எண் 31,68,97,111 ஆகிய ரேஷன் கடைகளில் அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப் படுகிறது. டிசம்பர் மாதத்திற்கான இலவச ரேஷன் அரிசி கடந்த 6 நாட்களாக மேற்குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.