நல்லம்பள்ளி, டிச.5: தொப்பூர் அருகே துணி துவைக்க சென்ற போது, ஓடையில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொப்பூர் அடுத்த சோழியானூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது மனைவியுடன், ஆந்திராவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா(12), சோழியனூரில் பாட்டியுடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஓடையில் துணி துவைப்பதற்காக சென்றாள். அப்போது, எதிர்பாராத விதமாக ஓடைக்குள் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டாள். அவளது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்-பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் பிரியங்கா தண்ணீரில் மூழ்கி விட்டாள்.