வாலிபர் தூக்கில் தற்கொலை

கிணத்துக்கடவு,டிச.5: கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரை சேர்ந்தவர் முகமது இப்ராஹீம். இவரது மகன் உசேன் பயாஸ்(18). ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 மாதமாக தீராத வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்றுமுன்தினம் இரவு மாடியில் படுத்திருந்த இவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.வலி தாங்கமுடியாமல் உசேன் பயாஸ் தூக்கிட்டு கொண்டார். மகனின் அலறல் சத்தம் கேட்டவுடன் முகமது இப்ராஹீம் மாடிக்கு சென்று பார்த்த போது மகன் தூக்கில் கொண்டு இருந்தார்.

இதுகுறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: