கோவை, டிச.4: கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள நடைபாதையில் சம்பவத்தன்று முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் சுய நினைவை இழந்து கிடந்தார். இதனைப்பார்த்த சிலர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 65 வயது மதிக்கத்தக்க அந்த நபர்? யார் எந்த ஊர் என்பன போன்ற விவரம் தெரியவில்லை.