பொம்மிடி அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.2: பொம்மிடி அருகே பையர்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட காவல்துறை மற்றும் கிரஸ்ட் இந்தியா பவுன்டேஷன் சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கோவையைச் சேர்ந்த பேராசிரியர் வண்ணத்தமிழ் சூர்யா பங்கேற்று குழந்தை திருமணம், பாலியல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், துணை தலைமை ஆசிரியர் தொப்பையன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: