தர்மபுரி, ஏப்.20: தர்மபுரி மாவட்டத்தில், இன்று(20ம் தேதி) முதல் இரவு நேரத்தில் ஊரடங்கு எதிரொலியாக, அரசு பஸ்கள் பேருந்து நிலையங்களிலிருந்து மார்க்கம் வாரியாக மாற்றி இயக்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு இன்று (20ம் தேதி) முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலத்தின் மூலம் பொதுமக்களின் நலன் கருதி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலிருந்து கீழ்க்கண்ட மார்க்கங்களுக்கு, அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கடைசி பேருந்தாக புறப்பட்டு, இரவு 10 மணிக்குள் எதிர்திசையில் சென்றடையும் வகையில், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.