83 பேருக்கு கொரோனா

தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 83பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6789பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று 25பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 527பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம், தர்மபுரி போக்குவரத்து போலீசார் ஒருவர் கொரோனாவால் பலியானார். இவருடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 56பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Related Stories: