அரூர் அருகே வங்கி காவலாளியை தாக்கிய 2 பேர் கைது

அரூர், ஏப்.13:அரூர் அருகே கூட்டுறவு வங்கி காவலாளியை தாக்கிய 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நாசினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). சந்தைபேட்டை கூட்டுறவு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், எட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்(29) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து புகார் அளிப்பதற்காக, இருவரும் அரூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, காவல்நிலையத்தில் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சதீஷ் மற்றும் அவரது தம்பி வீரமணி(26) ஆகியோர், சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர், அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சதீஷ் மற்றும் வீரமணியை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: