கோவை மாவட்டத்தில் 473 பேருக்கு கொரோனா

கோவை, ஏப். 10: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதியதாக 473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 70-ஆக உயர்ந்தது. மேலும், கொரோனாவுக்காக சிகிச்சைப்பெற்று வந்த 142 பேர் நேற்று குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 982-ஆக உயர்ந்தது.தற்போது கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 389 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றினால் 1 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்றினால் கோவையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 699-ஆக உயர்ந்தது.

Related Stories: