பனமரத்துப்பட்டியில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை

அரூர், ஏப்.9: அரூர்- தர்மபுரி மெயின் சாலையில் மொரப்பூர் அருகே செட்ரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செட்ரப்பட்டி, பனமரத்துப்பட்டி உள்பட ஏராளமான கிராம மக்கள் பள்ளி, கல்லூரி செல்ல, மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அரூர் மொரப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஊரிலிருந்து சிறிது தூரம் நடந்து வந்து பேருந்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இங்குள்ள நிழற்கூடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தால், நிழற்கூடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது நிழற்கூடம் இல்லாததால், மக்கள் கடும் வெயிலில், பேருந்திற்கு மரத்தடியில் காத்திருக்க நேரிடுகிறது. எனவே, இப்பகுதியில் புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: