பள்ளிகொண்டா, ஏப்.8:பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் பிரமோற்சவ விழா வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற உத்திர ரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 11ம் தேதி செல்வர் உற்சவத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. 12ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு அன்னவாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 2ம் நாள் காலை தோளுக்கினியானும், இரவு சிம்ம வாகனமும், 3ம் நாள் காலை அனுமந்த வாகனமும். இரவு புன்னைமரம், 4ம் நாள் காலை நாக வாகனமும், இரவு யாளி வாகனமும், 5ம் நாள் காலை நாச்சியார் திருக்கோளமும், இரவு கருட வாகனமும், மலர் காவடியும் நடக்கிறது.