தர்மபுரி, ஏப்.2:பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி எம்எல்ஏ, நேற்று தர்மபுரி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டகுப்பம், மூக்கனூர், வெள்ளோலை, செட்டிகரை, உங்கராணஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது, வேட்பாளர் கோவிந்தசாமி பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.