தர்மபுரி, ஏப்.2: அதியமான்கோட்டை சுயம்பு காளியம்மன் கோயிலில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பழமையான சுயம்பு காளியம்மன் கோயிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 12ம் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பபூஜை, அம்மனுக்கு பால் அபிஷேகம், கோபூஜை, விநாயகர் தேர் இழுத்தல் மற்றும் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது.