சுயம்பு காளியம்மன் கோயில் தேரோட்டம்

தர்மபுரி, ஏப்.2: அதியமான்கோட்டை சுயம்பு காளியம்மன் கோயிலில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பழமையான சுயம்பு காளியம்மன் கோயிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 12ம் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பபூஜை, அம்மனுக்கு பால் அபிஷேகம், கோபூஜை, விநாயகர் தேர் இழுத்தல் மற்றும் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக பெரிய தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் மீது பக்தர்கள் உப்பை தூவினர். நேற்று முன்தினம், பெரிய தேர்நிலை அடைதல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஸ்ரீ அம்மன் ஊர்வலத்துடன் திருவிழா நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories: