தோகைமலை, ஏப். 1: தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி கடன்வாங்கியூர் கருப்பன் மனைவி தனலட்சுமி (35) ; கருப்பனுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கருப்பன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது சகோதரி மருதாயி என்பரின் உறவினர்களுக்கு எழுதி கொடுக்க ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தனலட்சுமி தனது கணவர் கருப்பனிடம் தடுத்து கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு முற்றியதால் அருகில் வசிக்கும் கருப்பனின் சகோதரி மருதாயின் உறவினர்களான கோமதி (36), விஜயா ( 40), கிருஷ்ணமூர்த்தி (26). ஆகியோர் வந்தனர்.