திருப்பரங்குன்றம், ஏப்.1: முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முதல்படை வீடான திருபரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. முன்னதாக நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம்ே வந்தடைந்தனர்.