காரிமங்கலம், மார்ச் 25: காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களை அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஊராட்சியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், இங்கு பணி புரியும் பெண் டாக்டர் ஒருவர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கடுமையாக பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இவரது போக்கை கண்டித்து, கடந்த சில மாதங்களுக்கு முன், பொதுமக்கள் போராட்டம் நடத்தி, மருத்துவமனையை மூட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.