அரூர், மார்ச் 13: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இன்றும், நாளையும்(14ம் தேதி) விடுமுறை தினமாகும். நாளை மறுநாள்(15ம் தேதி) முதல் வரும் 19ம் தேதி வரை, தினசரி காலை 11 மணி முதல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை அனைத்து கட்சியினரும் முடுக்கி விட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், அரூர்(தனி) தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக மற்றும் அமமுக, நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.