பென்னாகரம், மார்ச் 11: பென்னாகரத்தில், காவல் துறை சார்பில் சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில், சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், டிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்திற்கு கூடுதல் வாகனங்களை பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும். வாக்களிக்கும் நாளுக்கு 48 மணி நேரம் முன்னதாக, பிரசாரத்தை முடிக்க வேண்டும். பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஒவ்வொரு பத்து வாகனங்களாக பிரிக்கப்பட வேண்டும். இவற்றுக்கு இடையே 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வெடி பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.தேர்தல் தொடர்பான பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.