தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக, 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு பாடி கேமராவை எஸ்பி பிரவேஸ்குமார் நேற்று வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் காவல்துறை சார்பில், பாடி கேமரா வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக நேற்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு, எஸ்பி பிரவேஸ்குமார் நேரடியாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் கூடுதல் எஸ்பி புஷ்பராஜ், தொழில் நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் தொழில் நுட்ப பிரிவு எஸ்ஐ திவ்யா ஆகியோர் உடனிருந்தனர்.