பென்னாரம், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பென்னாகரத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சினர் இடையே மோதலை தடுக்கவும், வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 150க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், உரிய பாதுகாப்பு வழங்குவதை உணர்த்தும் வகையிலும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நேற்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.