கரூரில் 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர், பிப்.26: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் நான்காவது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். விஜயலட்சுமி, கல்யாணி, புஷ்பவள்ளி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம் கலந்துகொண்டு பேசினார். இதில், பல்வேறு சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பேசினர். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது, பணிக் கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Related Stories: