கடத்தூரில் திமுகவினர் சைக்கிள் பேரணி

கடத்தூர், பிப்.23:  பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமையில், சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. சில்லரஹல்லி கிராமத்தில் தொடங்கிய பேரணி கடத்தூர் பேருந்து நிலையத்தில் முடிந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், பிரபு ராஜசேகர், நிர்வாகிகள் சித்தார்த்தன், வழக்கறிஞர் முனிராஜ், கேஸ் மணி, மூர்த்தி, ரமேந்தர், புருஷோத்தமன், ராஜேந்திரன், மாரிமுத்து, சுகுணா ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: