கோவை, பிப்.21: கோவை கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதம் (80). மார்பு வலியால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று தனது மனைவி, மகள், பேரன் ஆகியோருடன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கால் டாக்சியில் வந்தார். காரில் ஆதம் குடும்பத்தினர் துணி பேக் மற்றும் பல்வேறு பொருட்களை வைத்திருந்தனர். காரை ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்த பாபி (46) என்பவர் ஓட்டி வந்தார். மருத்துவமனை முன் காரில் இறங்கிய இவர்கள் பேக்குகளை எடுத்து கொண்டு இறங்கினர். சில நிமிட நேரம் கடந்து, பாபியின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அப்போது பேசியவர், ‘‘என் பெயர் ஆதம், நானும் என் குடும்பத்தினரும் உங்கள் காரில்தான் மருத்துவமனைக்கு வந்தோம். அதில் ஒரு பேக் இருக்கிறது. நாங்கள் எடுக்க மறந்து விட்டோம். எங்களிடம் வந்து ஒப்படைக்கவும்’’ என கேட்டார். அதற்கு பாபி உங்கள் பேக் கலர் என்ன என கேட்டார். அவரால் என்ன கலர் என சொல்லமுடியவில்லை. பாபி பேக்கை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது.