தர்மபுரி, பிப்.17: குடிசை மாற்று வாரியம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ₹14.19 கோடியில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி துவங்கியது. பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பூனையானூர் கிராமத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், ₹14.19 கோடி மதிப்பில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி துவக்கவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சார் ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.