ராஜபாளையம், மார்ச் 24: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அவர்களது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் வக்கீல் பகத்சிங், ஏஐஎஸ்எப் மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் அய்யணன், ஜெயராம், மாயாண்டி, தங்கவேல், அழகர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
