சென்னை: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சியை வன்மையாக கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன். மக்களாட்சியில் இத்தகைய வன்முறை செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தற்போது அவர் நலமாக உள்ளார் என அறிந்து நிம்மதி கொள்கிறேன். அவருக்கும் ஒமர் அப்துல்லாவுக்கும் இவ்வேளையில் எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- பருச் அப்துல்லா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- பிரதமர் எம். ஏ
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- கே. சமூக
- ஸ்டாலின்
- ஜம்மு
- காஷ்மீர்
