கரூர், பிப்.11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள போக்குவரத்து பனிமனை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல சங்கத்தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சகாதேவன், நாகலட்சுமி, மணி, ராஜேந்திரன், ஹரிந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பொருளாளர் இளங்கோ நன்றி கூறினார்.