காரிமங்கலம், பிப்.11: காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி - குப்பாங்கரை பிரிவு சாலையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் நான்கு வழிச்சாலையை பராமரிக்கும் தனியார் நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.