அரூர் அருகே சிலிண்டர் வெடித்து 2 குடிசைகள் சேதம்

தர்மபுரி, பிப்.11: அரூர் அருகே கொங்கவேம்பு செட்டிகுட்டையை சேர்ந்தவர் தேவராஜ் (65). அவரது வீட்டின் அருகே வசிப்பவர் சின்னம்மாள்(63). உறவினர்களான இவர்கள் இருவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சின்னம்மாள் வீட்டில் லைட்டை ஆன் செய்த போது, சிலிண்டரில் தீப்பற்றி எரிந்தது. தேவராஜ் வீட்டிற்கும் தீ பரவியது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த அரூர் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைத்தனர். இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிசாமி கூறுகையில், ‘வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. அது தெரியாமல் லைட்டை ஆன் செய்ததால், தீப்பிடித்ததில் காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது,’ என்றார்.

Related Stories: