கறம்பக்குடி மார்ச் 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நம்ப ன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவர் வளர்த்து வந்த ஆடு அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அக்கம் பக்கத்தினர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தீயணை நிலைய அலுவலர் பாபில் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றுள் இறங்கி கத்திக்கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டனர்.
